இந்த வீதியில்
எல்லா வீடுகளும் அழகு தான்!
நாளொரு வண்ணம் பூசும் வீடுகள்!!
காரை பெயர்ந்த வீடுகள்!
பூட்டப்பட்ட இருண்ட வீடுகள்!!
வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள்!
புதுமையை புறக்கனித்த வீடுகள்!!
வகை வகையை இருப்பினும்
ஏனோ கால்கள்
இந்த வீட்டின் வாசலில்
நின்று விடுகின்றது!
இங்கே வசிக்க முடியாமல் போனாலென்ன
வாழ்நாளெல்லாம் கடந்து செல்வேன்
இந்த வீதி வழியே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment