Wednesday, September 26, 2007

என் தோழி

நம் நட்பு கரைந்து
எந்தப் புள்ளியில் காதலானது..
பொய்யாய் நான் கூறிய வீரபிரதாபங்களை

கேட்டு நீ அதிசயித்தயே..
அந்தப் பொழுதிலா...
கோபம் கொன்டு பேசாமல் செல்கையில் - பின்

வீதியின் முடிவில் திரும்பிப் பார்த்த
அந்தப் பொழுதிலா...
தவறு உன்னுடயதாய் இருப்பினும்

உனக்காக வாதிடும்
அந்தப் பொழுதிலா...
எவருடனோ கொண்ட கோபத்தை - என்னில்

தனித்த போது அமைதி காத்த
அந்தப் பொழுதிலா...
இருவருக்குள் ஏற்படும் கருத்து மோதலுக்கு

பின் ஏற்படும் சூன்யமான
அந்திப் பொழுதிலா...
பின் எப்பொழுது எனக் கூறுவாயா

என் தோழி....

No comments: