Wednesday, September 26, 2007

திருமணம்

இன்று
உன்னோடு நான் கொண்ட
திருமண பந்தத்தை
முறித்துக் கொண்ட நாள்
எத்தனை ஆண்டுகள்
கடந்ததென நினைவிலில்லை..

கைம்பெண்ணாய் இருந்திருந்தால்
இச்சமூகம் சிறிதளவேனும்
அனுதாப்படிருக்கும்..
ஆனால் என் காதுகள் கேட்டதோ
ஏளனப்பேச்சுக்களும், அழைப்புகளும்..

முறிவிற்கு நானும் ஓர் காரணமோ எனக்கூறி
அடிக்கடி கூசுகிறதுஅடிமனசு..
திருமணமே வேண்டாம் எனும்
பிடிவாதத்தை இன்னும் சற்று
ஆனித்தரமாக்கியிருக்கலாமோ
என ஏங்குகிறது மனசு..

வாழ்க்கை ஓட்டத்தில்
இரணமான இதயத்தோடும்,
தூங்கா இரவுகளோடும்,
இவ்வார்த்தைகளை தூக்கியெறிய
ஆனது பல ஆண்டுகள்..
ஆயினும் விஷம் தடவி

வீசப்பட்ட வார்த்தை அம்புகள்
இன்னமும் உயிர்க்குடித்துக் கொண்டு...
காயங்கள் ஆறினாலென்ன..
தழும்புகள் துருத்திக் கொண்டு
தானே இருக்கின்றன.

No comments: