கள்ளிச்செடி பூத்திடுச்சு!
காதல் தான் மலர்ந்திடுச்சு!!
காணாதக் கண்ணிரண்டும்
இமை மூட மறந்திடுச்சோ!!!
பேசிக்கொள்ள நினச்சதெல்லாம்
நா மறந்துப் போயிடுச்சு!
வார்த்தையெல்லாம் வாய்க்குள்ளே
வாழ்விழந்துப் போயிடுச்சோ!!
காணாது உன் தேகம்
கலையிழந்துப் போயிடுச்சு!
பாவி மக ஒடம்பினிலே
பசலை வந்துப் பாஞ்சுடுச்சோ!!
முத்தமிட முன் செல்ல
மூன்று விரல் பதிஞ்சிடுச்சு!
முன்கோபக்காரி மனசு
மூளைக்குத் தான் வெலங்கலயோ!!
பாலும் கசந்திடுச்சு!
சித்தம் தான் கலங்கிடிச்சோ!!
காதல் தான் கனிஞ்சிடிச்சு!!
கள்ளிச் செடி காய்க்கலியே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment