நெருப்பினில் தோய
நேரம் வந்துவிட்டது..
உருகாமல் இங்கே கருகிவிடக்கூடும்.
உண்மை உறைப்பின் அதிரக்கூடுமோ…
அன்றி ஏளனம் செய்வாயோ
முற்ச்சொன்ன பொய்களும் புரட்டுக்களும்
பல்லிளிக்கக் கூடுமோ..
பின் எது தடுக்கிறது..
தன்மானத்திற்கும் வறட்டு கெளரவத்திற்குமான
தடுமாற்ற கணங்களில்
உண்மையும் நானும்
மௌனமாய்..
Saturday, September 29, 2007
Wednesday, September 26, 2007
தந்தை
அன்றொரு மழைநாளில்
நான் நட்ட விதையொன்று
மண்பிளந்து இதழ் விரித்ததில்
மனதெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது!
தளிர்கள் வெய்யிலில் நோகுமோ,
பெருமழையில் பேச்சற்று போகுமோ,
என கண்ணும் கருத்துமாய்
காத்து வருகையிலே
தண்டொன்றில்
மொட்டொன்று
வீசக் கண்டேன்!
மொட்டவிழ்ந்து
பூவாகி விட்டதென
பூரித்த வேளையிலே
ஐயகோ!
எவர் அதைக் கொய்தது?
காம்பினில் முட்களை
மட்டும் விடுத்து!
கொய்தது கண்டால்
கொதித்தெழுமே என் சாதி!
மனிதரில் மிருககுணத்தின் மீதி!!
கொய்தவனுக்கே சொந்தமென்றது நீதி!!!
அடப்போடா,
கொய்தவனுக்கும் வேண்டாம்
இந்தக் கொடுமை.
நான் நட்ட விதையொன்று
மண்பிளந்து இதழ் விரித்ததில்
மனதெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது!
தளிர்கள் வெய்யிலில் நோகுமோ,
பெருமழையில் பேச்சற்று போகுமோ,
என கண்ணும் கருத்துமாய்
காத்து வருகையிலே
தண்டொன்றில்
மொட்டொன்று
வீசக் கண்டேன்!
மொட்டவிழ்ந்து
பூவாகி விட்டதென
பூரித்த வேளையிலே
ஐயகோ!
எவர் அதைக் கொய்தது?
காம்பினில் முட்களை
மட்டும் விடுத்து!
கொய்தது கண்டால்
கொதித்தெழுமே என் சாதி!
மனிதரில் மிருககுணத்தின் மீதி!!
கொய்தவனுக்கே சொந்தமென்றது நீதி!!!
அடப்போடா,
கொய்தவனுக்கும் வேண்டாம்
இந்தக் கொடுமை.
மீண்டும் வேண்டும்
மிளகாய் கடித்து
பழையதும் பருப்புத்தொகையலும்
உண்டு களித்திருக்கிறாயா..
பனங்கொட்டை வெட்டியெடுத்து
பருப்பும் தான் ருசித்ததுண்டா..
தொண்டைக்கதிர் உருவி
பால்நெல்லை ருசித்ததுண்டா..
பனங்குருத்து வெட்டியெடுத்து
பங்குப் போட்டுத் தின்றதுண்டா..
கூட்டாஞ்சோறு ஆக்கி
கூடித்தான் களித்ததுண்டா..
கடலைச்செடி புடுங்கி
திகட்ட திகட்ட தீர்த்ததுண்டா..
புளியம்பிஞ்சோடு உப்பு
தோய்த்து புல்லரித்ததுண்டா..
அடைமழையில் உளுந்து
வறுத்து வாடை போக்கியதுண்டா..
அயிறைக்குஞ்குகளை அரைவேக்காட்டில்
ஆவிப்பறக்க ருசித்ததுண்டா..
அடப்போங்கடா நீங்களும்
உங்க மெனு கார்டும்..
பழையதும் பருப்புத்தொகையலும்
உண்டு களித்திருக்கிறாயா..
பனங்கொட்டை வெட்டியெடுத்து
பருப்பும் தான் ருசித்ததுண்டா..
தொண்டைக்கதிர் உருவி
பால்நெல்லை ருசித்ததுண்டா..
பனங்குருத்து வெட்டியெடுத்து
பங்குப் போட்டுத் தின்றதுண்டா..
கூட்டாஞ்சோறு ஆக்கி
கூடித்தான் களித்ததுண்டா..
கடலைச்செடி புடுங்கி
திகட்ட திகட்ட தீர்த்ததுண்டா..
புளியம்பிஞ்சோடு உப்பு
தோய்த்து புல்லரித்ததுண்டா..
அடைமழையில் உளுந்து
வறுத்து வாடை போக்கியதுண்டா..
அயிறைக்குஞ்குகளை அரைவேக்காட்டில்
ஆவிப்பறக்க ருசித்ததுண்டா..
அடப்போங்கடா நீங்களும்
உங்க மெனு கார்டும்..
மன்னித்து விடு...
மன்னித்து விடு
உன் பாசத்தின்
பரவசத்தை உணரா - இந்த
பாழாய்ப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மரித்துப் போவேன் என்றாலும்
மறுதலிக்கும் - இந்த
மரத்துப் போன இதயத்தை
மன்னித்து விடு...
அருகிலிருந்தாலே போதும் எனும்
ஆசைகளை அழித்தெடுத்த - இந்த
அழுகிப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மறுஜென்மத்தில் சந்திப்போம்
எனக்கூட கூற மறுத்த - இந்த
மரித்து போன இதயத்தை
மன்னித்து விடு...
மன்னிப்பாயா.........
உன் பாசத்தின்
பரவசத்தை உணரா - இந்த
பாழாய்ப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மரித்துப் போவேன் என்றாலும்
மறுதலிக்கும் - இந்த
மரத்துப் போன இதயத்தை
மன்னித்து விடு...
அருகிலிருந்தாலே போதும் எனும்
ஆசைகளை அழித்தெடுத்த - இந்த
அழுகிப் போன இதயத்தை
மன்னித்து விடு...
மறுஜென்மத்தில் சந்திப்போம்
எனக்கூட கூற மறுத்த - இந்த
மரித்து போன இதயத்தை
மன்னித்து விடு...
மன்னிப்பாயா.........
நண்பா..
நண்பா!
உன்னோடு நான்
கொண்ட நெருக்கத்தை
பிரிதொருவரோடு
கொண்டிருக்கவில்லை..
மறைப்பதாய் நீ
மறுதலித்தபோது
மெளனமானேன்...
ஏன்..
எவ்விடத்தில்
நம்பிக்கை இழக்க
காரணமானேன் என
யோசித்ததால்...
உன்னோடு நான்
கொண்ட நெருக்கத்தை
பிரிதொருவரோடு
கொண்டிருக்கவில்லை..
மறைப்பதாய் நீ
மறுதலித்தபோது
மெளனமானேன்...
ஏன்..
எவ்விடத்தில்
நம்பிக்கை இழக்க
காரணமானேன் என
யோசித்ததால்...
சித்திரையில் என்ன வரும்!
சித்திரையில் என்ன வரும்!
பள்ளி விடுமுறை நாட்கள் தான்
ஞாபகம் வரும்!!
கோடையில் ஆறு குளம்
நீர் வற்றிப்போகஆள்துளை கிணற்றில்
ஆட்டம் போட்ட நாட்கள்..
மாமரம் ஏறி
விழுந்து காலை உடைத்துக் கொண்டு
மருத்துவமனையில் வீணாய் போன
விடுமுறை நாட்கள் ..
தேன் என்றெண்ணி
கதன்டு கூட்டை கலைத்து
துரத்தப்பட்டு ஒடிய நாட்கள்..
தேர்வு முடிவு தேதிகள்
நாட்காட்டி இதழ்களாய்
பறந்து பயமுறுத்திய இரவுகள்..
அறுவடை செய்து சேர்த்து வைத்ததை
செலவு செய்ய வரும்
திருவிழாக்களும் திருமணங்களும்
நியாபகத்தில் நிழலாடும்...
சித்திரை மீண்டும் மீண்டும் வரும்
நீண்ட விடுமுறைகள் எப்பொழுது வரும்.
பள்ளி விடுமுறை நாட்கள் தான்
ஞாபகம் வரும்!!
கோடையில் ஆறு குளம்
நீர் வற்றிப்போகஆள்துளை கிணற்றில்
ஆட்டம் போட்ட நாட்கள்..
மாமரம் ஏறி
விழுந்து காலை உடைத்துக் கொண்டு
மருத்துவமனையில் வீணாய் போன
விடுமுறை நாட்கள் ..
தேன் என்றெண்ணி
கதன்டு கூட்டை கலைத்து
துரத்தப்பட்டு ஒடிய நாட்கள்..
தேர்வு முடிவு தேதிகள்
நாட்காட்டி இதழ்களாய்
பறந்து பயமுறுத்திய இரவுகள்..
அறுவடை செய்து சேர்த்து வைத்ததை
செலவு செய்ய வரும்
திருவிழாக்களும் திருமணங்களும்
நியாபகத்தில் நிழலாடும்...
சித்திரை மீண்டும் மீண்டும் வரும்
நீண்ட விடுமுறைகள் எப்பொழுது வரும்.
நீளும் இரவுகள்...
உன் கரம் பற்றி
நடந்த வீதிகளின் வழி
மீண்டும் மீண்டும்
கடக்க எத்தனிக்கிறேன்..
கண்ணீரில் கரையும்
பிம்பம்களினால்
எட்டமுடியவில்லை
வீதியின் முடிவை...
நடந்த வீதிகளின் வழி
மீண்டும் மீண்டும்
கடக்க எத்தனிக்கிறேன்..
கண்ணீரில் கரையும்
பிம்பம்களினால்
எட்டமுடியவில்லை
வீதியின் முடிவை...
Subscribe to:
Posts (Atom)