எனது அகவை 65க்கும் மேல்
என்னிரு கைகள் பின்புறம் கட்டப்பட்டு
அரை நிர்வாணமாய் மண்டியிட்டிருந்தேன்
தாம்புகளின் அழுத்தத்தில்
இரத்தம் வழிவது போன்ற உணர்வு
இனி இவ்வுடலில் வழிவதற்க்கு
இரத்தமும் இல்லை கண்ணீரும் இல்லை
தூரத்தே துப்பாக்கிகள் முழங்குகின்றன..
மரணம் புதிதல்ல,
எதிர்கொள்ள அச்சமின்றி ஆவலாய்..
அயர்ச்சி, தளர்ச்சி, இயலாமை
மூன்றும் துரத்தமண்ணில் சரியத் தொடங்கினேன்…
எட்டி உதைத்ததில் விழிகள் விரிந்தன
எவனோ நின்று கொண்டிருந்தான்
வசைபாடமல் வாழ்த்த எத்தனித்தேன்
நா எழவில்லை,
கீழுதடு மட்டும் துடித்தது..
அதை அவன் கவனிக்கவில்லை
கவனித்திருந்தால்,
இங்கே கொஞ்சம் உயிர் இருக்கிறது
என்றெண்ணி உதட்டின் மேல்
எட்டி உதைத்திருக்கக் கூடும்..
வெயிலின் உக்கிரத்தை வைத்து
நேரத்தை என்னால் கணிக்க முடியவில்லை..
வெம்மையில் குளிர்ச்சியாய் முகத்தில்
ஓர் துளி நீர் பட்டுத் தெரித்தது
உடல் சிலிர்க்கவில்லை
உயிர் மட்டுமே சிலிர்த்தது
உன் ஸ்பரிசம் நினைவிலாடியது..
அதிருக்கட்டும்..,
வெட்ட வெளியில் ஆங்கோர் முதியவரை
கைகளை பிணைத்து மண்ணில்
ஏன் சரித்திருக்கிறார்கள்
அருகில் செல்லுங்கள்
அறிமுகமானவராய் இருக்கக் கூடும்…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment