வசந்த காலங்களில் வண்ண வண்ண
மலர் வீசி கனி கொடுத்த மரம்
பட்சிகள் பலவும் வந்தமர்ந்து
ஊண்டு கழித்து பரவசப்பட்ட மரம்
வெயிலில் வாடியவர்கட்கெல்லாம்
நிழல் தந்து நின்ற மரம்
இன்றோ
கேட்ப்பாரற்று நிற்க்கும் ஒற்றை மரம்
ஒற்றை மரம் மட்டுமல்ல பட்ட மரமும்
தோப்பிற்க்காகாதென
ஓதுங்க நிழல் தேடி......
வீழ்வை எதிர் நோக்கி....
அட அதென்ன
ஓரு கிளையில்
மட்டும் துளிர்கள்?
ஓ!
புல்லுருவி பாய்ந்து விட்டதோ!!!
பட்டுப்போன மரத்தோடு
பட்டும் படாமல் சில பந்தங்கள்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment