அன்றொரு மழைநாளில்
நான் நட்ட விதையொன்று
மண்பிளந்து இதழ் விரித்ததில்
மனதெங்கும் உற்சாகம் ஊற்றெடுத்தது!
தளிர்கள் வெய்யிலில் நோகுமோ,
பெருமழையில் பேச்சற்று போகுமோ,
என கண்ணும் கருத்துமாய்
காத்து வருகையிலே
தண்டொன்றில்
மொட்டொன்று
வீசக் கண்டேன்!
மொட்டவிழ்ந்து
பூவாகி விட்டதென
பூரித்த வேளையிலே
ஐயகோ!
எவர் அதைக் கொய்தது?
காம்பினில் முட்களை
மட்டும் விடுத்து!
கொய்தது கண்டால்
கொதித்தெழுமே என் சாதி!
மனிதரில் மிருககுணத்தின் மீதி!!
கொய்தவனுக்கே சொந்தமென்றது நீதி!!!
அடப்போடா,
கொய்தவனுக்கும் வேண்டாம்
இந்தக் கொடுமை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment